வேதாரண்யம் என்ற ஊரில் வசித்து வந்த விவேக சாஸ்திரி என்ற ஒரு பிராமணர் தமது மூன்று குமாரர்களும் லௌகீக தந்திரங்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு சில கதைகளை அவர்களுக்குச் சொல்லி விட்டுப் போனதாக பாரதியார் தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த நீதிக்கதைகளில் மாந்தர்கள் மட்டுமின்றி பறவைகளும் விலங்குகளும் கதாபாத்திரங்களாக வருகின்றன. தெய்வ பக்தியும் விவேகமும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்றும் துரோகம் செய்வது பாவம் என்றும் தவறை உணர்ந்தவனை மன்னிக்கலாம் என்றும், நேர்மையும் அன்பும் எதையும் வெல்லும் என்பன போன்ற பல நீதிகளை இக்கதைகள் போதிக்கின்றன. தமக்கே உரித்தான மிகச் சிறந்த தமிழ் நடையில் இக்கதைகளை ஆக்கியுள்ளார் மகாகவி. சுற்றிவளைத்து எழுதாமல் பாமர மக்களின் உணர்ச்சிகளை எடுத்துக்கூறும் வகையில் இக்கதைகள் அமைந்துள்ளன. இக்கதைகளை படிக்கும் போது அவற்றில் உள்ள எளிமையும் நகைச்சுவையும் நம்மை பிரமிக்க வைக்கும்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, பாரதி என்ற பட்டம் வழங்கினார்.
நவதந்திரக் கதைகள் (Navathanthira Kathaigal):
ஆசிரியர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
உள்ளடக்கம்:
முன்னுரை
1. முதற் பகுதி - பயனறிதல்
சங்கீதம் படிக்கப்போன கழுதையின் கதை
மாணிக்கஞ் செட்டி மானி அய்யனை நகைத்தது
ரோஜாப் பூ என்ற பாம்பின் கதை
கர்த்தப ஸ்வாமிகள் என்ற ஆண்டி கதை
கர்த்தப ஸ்வாமியைப் பாம்புப் பெண் வசப்படுத்தியது
த.கொ. செட்டி கதை - வெண்பா
2. இரண்டாம் பகுதி - நம்பிக்கை
காட்டுக்கோயிலின் கதை
திண்ணன் என்ற மறவன் கதை
உபாயவஜ்ரன் என்ற நரியின் திறமை
கோவிந்த நாம சங்கீர்த்தனக் கூட்டம்
சூனியக் குகையில் மந்திராலோசனை
உபாயவஜ்ரன் என்ற நரியின் திறமைகள்
பிராமணப் பிள்ளை நாலு சாஸ்திரம் படித்துக்கொண்டு வந்த கதை
கதம்ப வனத்தில் நடந்த செய்திகள்
Enjoy the Reading.
App Feature:
* Can read this book Offline. No internet required.
* Easy Navigation between Chapters.
* Adjust font size.
* Customised Background.
* Easy to Rate & Review.
* Easy to share App.
* Options to find more books.
* Easy to use.